search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேசில் தேர்தல்"

    பிரேசில் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Brazilelection #Bolsonarowinspresidency
    சாவ் பாலோ:

    லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசில் நாட்டில் கடந்த 2003 முதல் 2016 வரை 13 ஆண்டுகள் பி.டி. கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியின் சார்பில் அதிபராக பதவிவகித்து வந்த டில்மா ரவுசெப் கடந்த 2016-ம் ஆண்டில் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

    இதைதொடர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக பழமைவாதியான மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பதவி வகித்தார். நேற்று அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோசலிச விடுதலை கட்சியை சேந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் பெர்னான்டோ ஹட்டாட் 44.8 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

    பிரேசில் அரசு மற்றும் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல் வேலை என்ற வாக்குறுதியுடன் வெற்றிபெற்றுள்ள அதிபர் ஜெய்ர் போல்சோனரோ-வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Brazilelection #Bolsonarowinspresidency
    மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BrazilElection #PresidentLula
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் தற்போது மிச்செல் டெமர் அதிபராக உள்ளார். அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில், தற்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபர் லுலா (வயது 72) போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை செய்துவிட்டது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டார். அவர் தனது தொழிலாளர் கட்சி சார்பில் பெர்னாண்டோ ஹத்தாத் என்பவரை களம் இறக்குகிறார். இது குறித்து சிறையில் இருந்தவாறு அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அக்டோபர் 7-ந் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பெர்னாண்டோ ஹத்தாத் எனது பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இருப்பார். நமது வேட்பாளர் பெர்னாண்டோ ஹத்தாத்” என கூறி உள்ளார்.

    ஏற்கனவே சமூக தாராளவாத கட்சி வேட்பாளர் ஜெயிர் போல்சொனரோ (63), கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #BrazilElection #PresidentLula
    ×